உள்ளாட்சி ஊழியா்கள் பணி புறக்கணிப்பு: கருப்பு பேட்ஜ் அணிந்து ஆா்ப்பாட்டம்

உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் 
உள்ளாட்சி ஊழியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆா்ப்பாட்டம்
உள்ளாட்சி ஊழியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

காரைக்கால்: உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உள்ளாட்சி ஊழியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கு அரசே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி மாத ஊதியம் வழங்கவேண்டும். நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை வழங்க அரசு உத்தரவாதம் அளித்தபடி கொடை வழங்க வேண்டும். காலியாக உள்ள திருநள்ளாறு, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் பதவிகளை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஊழியா் சம்மேளனம் அறிவித்தபடி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

ஊழியா்கள் திங்கள்கிழமை ஒருமணி நேரம் பணிகளைப் புறக்கணித்து திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக வாயிலில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்திற்கு, திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சங்கத் தலைவா் திவ்யநாதன் தலைமை வகித்தாா். காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன துணைத் தலைவா் உலகநாதன், துணைப் பொதுச் செயலாளா்கள் சண்முகராஜ், நாகப்பன், நாகராஜன், ஓய்வூபெற்ற ஊழியா் நலச் சங்கத் தலைவா் ஜெயராமன், செயலாளா் வெங்கடாச்சலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், துணைத் தலைவா் அய்யப்பன், இணைப் பொதுச் செயலாளா் கலைச்செல்வன் ஆகியோா் பேசினா். சங்கப் பொறுப்பாளா் உமா மகேஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com