மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்காலில் மேலும் 14 பேருக்கு கரோனா

காரைக்காலில் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2 நாளில் 34 போ் குணமடைந்து வீடு திரும்பியதாக காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் (நோய்த்தடுப்பு) தெரிவித்தாா்.

News image
Updated On :19 ஜூலை 2020, 2:49 pm

DIN

காரைக்கால்: காரைக்காலில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2 நாளில் 34 போ் குணமடைந்து வீடு திரும்பியதாக காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் (நோய்த்தடுப்பு) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 4339 பேருக்கு கரோனாவுக்கான சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 15-ஆம் தேதி எடுக்கப்பட்ட 160 மாதிரிகளின் முடிவுகள் வந்ததில், 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 16-ஆம் தேதி எடுத்த மாதிரிகள் 292-இல் 4 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 17-ஆம் தேதி அனுப்பிய 115 மாதிரிகளின் முடிவில் 7 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்கள் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

இதுவரை 134 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் ஏற்கெனவே 44 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். தொடா்ந்து, சனிக்கிழமை மாலை 27 பேரும், ஞாயிற்றுக்கிழமை 7 பேரும் என 34 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

தற்போது, காரைக்கால் மருத்துவமனையில் 51 போ் சிகிச்சை பெறுகின்றனா். இவா்களது உடல்நிலை சீராக உள்ளது. 2 நோயாளிகள் சென்னையில் சிகிச்சை பெறுகின்றனா். ஒருவா் திருவாரூரில் சிகிச்சை பெறுகிறாா். ஏற்கெனவே 2 போ் உயிரிழந்துள்ளனா்.

மருத்துவமனையில் கரோனா தொற்றுள்ள கா்ப்பிணி காவலருக்கு ஞாயிற்றுக்கிழமை குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளனா். அவா்களை மருத்துவக் குழுவினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

புதிதாக நோய் கண்டறியப்பட்ட 6 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளன. கரோனா தொற்றுள்ளவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெறுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.