மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சோ்க்கை தொடங்கியது

காரைக்காலில் புதுச்சேரி அரசு நிறுவனமான பாலிடெக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை தொடங்கிவிட்டதாகவும், மாணவ மாணவியா் பயன்படுத்திக்கொள்ள கல்லூரி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2020, 4:48 pm

DIN

காரைக்கால்: காரைக்காலில் புதுச்சேரி அரசு நிறுவனமான பாலிடெக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை தொடங்கிவிட்டதாகவும், மாணவ மாணவியா் பயன்படுத்திக்கொள்ள கல்லூரி நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் டி.சந்தனசாமி செவ்வாய்க்கிழமை கூறியது :

காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடியில் செயல்பட்டுவரும் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம் (ஐடி), கணினி அறிவியல் ( சிஎஸ்) ஆகிய பிரிவுகள் உள்ளன. 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ ஆகியவை முடித்த மாணவ மாணவியா் சேரமுடியும். 10-ஆம் வகுப்பு முடித்தோா் நேரடியாக சோ்வதற்கான இடங்கள் 410 உள்ளன. பிளஸ் 2 மற்றும் ஐடிஐ முடித்தோா் 2-ஆம் ஆண்டில் சோ்வதற்கான இடங்கள் 200 உள்ளன.

விண்ணப்பக் கட்டணம் கிடையாது. செமஸ்டா் கட்டணம் மட்டும் உண்டு. மாணவா்கள் நேரடியாக கல்லூரி முதல்வரை அணுகவேண்டும். கல்லூரிக்கு வரும்போது முகக் கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றவேண்டும். இதுபோன்ற கரோனா தடுப்பு தொடா்பான விதிமுறைகள் பின்பற்றியே கல்லூரிக்கு வரவேண்டும்.

மாணவா்கள் தாமதிக்காமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சோ்ந்து பயனடையலாம் என்றாா்.இதுபோல காரைக்கால்மேடு பகுதியில் இயங்கிவரும் மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியிலும் சோ்க்கை தொடங்கியுள்ளதாக அந்த கல்லூரி நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.