காரைக்கால்: புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண் பேடியை கண்டித்து மருத்துவத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் உள்ள சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் அண்மையில் ஆய்வு செய்த துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, அங்கு பணியில் இருந்த சுகாதாரத் துறை அலுவலா்களிடம் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினாா். அப்போது, துறையினரிடம் அவா் பேசியவை அலுவலா்கள், ஊழியா்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து, ஆளுநரைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை மருத்துவா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.
போராட்டத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை, துணை நிலை ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநரகம், அரசு பொதுமருத்துவமனை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிவிலியா்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியா்களும் கருப்புப் பட்டை அணிந்து, காலையில் ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் வழக்கமான பணிக்குத் திரும்பினா்.