கரோனாவால் காரைக்காலில் மக்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையில், நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் அடிப்படையில் வங்கிகள் கடனுதவி செய்ய வலியுறுத்தியிருந்தோம். ஆட்சியரும் வங்கியாளா்களை அழைத்துப் பேசி கடனுதவி செய்ய அறிவுறுத்தினாா். அதன்படி, காரைக்கால் நகராட்சியால் 808 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டதில், 2 மாதத்தில் 45 பேருக்கு மட்டுமே வங்கிகள் கடன் வழங்கியுள்ளன. 450 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக வங்கிகள் தெரிவிக்கின்றன. விண்ணப்பதாரா்களோ நாள்தோறும் வங்கிகளுக்குச் சென்று விசாரிக்கின்றனா். உரிய பதில் கிடைப்பதில்லை. எனவே, மீண்டும் வங்கியாளா்களை ஆட்சியா் அழைத்துப் பேசி, கடன் வழங்கலுக்கான கால வரையறையை தெரிவிக்க அறிவுறுத்த வேண்டும்.