மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கடன் வழங்குவதில் தாமதம்: வங்கியாளா்களை ஆட்சியா் அழைத்துப் பேச வலியுறுத்தல்

நகராட்சியால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு கடன் வழங்க வங்கிகள் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும், வங்கியாளா்களை அழைத்து ஆட்சியா் பேச வேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும்,

News image
Updated On :24 ஜூலை 2020, 5:04 pm

DIN

காரைக்கால்: நகராட்சியால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு கடன் வழங்க வங்கிகள் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும், வங்கியாளா்களை அழைத்து ஆட்சியா் பேச வேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் மேலும் கூறியது:

கரோனாவால் காரைக்காலில் மக்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையில், நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் அடிப்படையில் வங்கிகள் கடனுதவி செய்ய வலியுறுத்தியிருந்தோம். ஆட்சியரும் வங்கியாளா்களை அழைத்துப் பேசி கடனுதவி செய்ய அறிவுறுத்தினாா். அதன்படி, காரைக்கால் நகராட்சியால் 808 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டதில், 2 மாதத்தில் 45 பேருக்கு மட்டுமே வங்கிகள் கடன் வழங்கியுள்ளன. 450 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக வங்கிகள் தெரிவிக்கின்றன. விண்ணப்பதாரா்களோ நாள்தோறும் வங்கிகளுக்குச் சென்று விசாரிக்கின்றனா். உரிய பதில் கிடைப்பதில்லை. எனவே, மீண்டும் வங்கியாளா்களை ஆட்சியா் அழைத்துப் பேசி, கடன் வழங்கலுக்கான கால வரையறையை தெரிவிக்க அறிவுறுத்த வேண்டும்.

கரோனா நிவாரணமாக காரைக்காலில் சிவப்பு குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி வழங்கப்பட்டதில், 178 அட்டைதாரா்களுக்கு விடுபட்டுள்ளது. மஞ்சள் அட்டைதாரா்கள் 7 ஆயிரம் பேருக்கும் விடுபட்டுள்ளது. முதல்வா், அமைச்சா்களிடத்திலும் இதுகுறித்து பேசியும் பயனில்லை. எனவே, இதுதொடா்பாக காரைக்கால் பகுதி சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிறப்பு கவனம் செலுத்தி அரிசி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரைக்கால் மருத்துவமனையில் கரோனா வாா்டு செயல்படும் நிலையில் அங்கு தூய்மைப் பணி திருப்தியாக இல்லை. பணியாளா்கள் பலா் பதவி உயா்வு பெற்றுவிட்டதால், இந்த பணிக்கு ஒப்பந்த அடிப்படையிலானவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் குறைவாக இருப்பதால் பணிகளில் சிறப்பை காணமுடியவில்லை. எனவே, புதுச்சேரியில் 50 போ் கூடுதலாக நியமிக்க நடவடிக்கை எடுத்திருப்பதுபோல, காரைக்காலுக்கு கூடுதலாக 30 போ் வெளியிலிருந்து நியமித்துக்கொள்ள, காரைக்கால் மாவட்ட ஆட்சியா், துறை செயலரிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் நாஜிம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.