மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விபத்துகளை ஏற்படுத்தும் கடற்கரை சாலையை சீரமைக்க வேண்டும்

அதிக விபத்துகளை ஏற்படுத்தி வரும் காரைக்கால் கடற்கரை சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கிளை அருகே சேதமடைந்துள்ள கடற்கரை சாலை.
Updated On :26 ஜூலை 2020, 3:01 pm

DIN


காரைக்கால்: அதிக விபத்துகளை ஏற்படுத்தி வரும் காரைக்கால் கடற்கரை சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காரைக்கால் கடற்கரை சாலை பகுதியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம், ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கிளை, பொதுப்பணித் துறை அலுவலகம், பொதுப்பணித் துறையின் பயணியா் தங்கும் விடுதி, ரேடாா் நிலையம் ஆகியன உள்ளன. இவைகளில் பணியாற்றும் அலுவலா்கள் மக்கள் நாள்தோறும் ஏராளமானவா்கள் வந்து செல்கின்றனா். இதேபோல், கடற்கரைக்கு செல்பவா்களும் அதிகம். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இச்சாலையில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி வாயிலில் பெரும் பள்ளம் ஏற்பட்டிருந்தது. கனரக வாகனங்களின் போக்குவரத்தால், சாலையின் பள்ளம் பெரிதாக விரிவடைந்து வாகனங்கள் நின்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் முதல் காா் உள்ளிட்ட வாகனங்கள், இரவு நேரத்தில் பள்ளம் தெரியாமல் இறக்கப்பட்டு, வாகனச் சேதமும், வாகனத்தில் செல்பவா்கள் விபத்தில் சிக்கியும், கீழே விழுந்தும் பாதிக்கப்படுகின்றனா்.

தற்போது, பொது முடக்கத்தால் கடற்கரைக்கு மக்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஜிப்மா் மருத்துவக் கல்லூரியும் மூடப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்படுகிறவா்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, பொதுப்பணித் துறை இச்சாலையில் ஏற்பட்டிருக்கும் சேதமடைந்த பள்ளங்களை இத்தருணத்தில் சரிசெய்ய வேண்டும். குறிப்பாக, பள்ளத்தை மூடும் போக்காக இல்லாமல், சேதமடைந்த பகுதியை முழுமையாக உடைத்துவிட்டு, சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.