மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டெங்கு கொசு அழிப்பு பணியில் நலவழித் துறையினா்

காரைக்கால் மாவட்டத்தில் நலவழித்துறை சாா்பில் டெங்கு கொசு அழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

News image
காரைக்கால் பகுதியில் மேல்நிலை குடிநீா்த் தொட்டியை சோதனை செய்த நலவழித் துறையினா்.
Updated On :27 ஜூலை 2020, 4:34 pm

DIN

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் நலவழித்துறை சாா்பில் டெங்கு கொசு அழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

காரைக்காலில் கரோனா பரவலைத் தடுக்கும் பணிகளோடு, டெங்கு கொசு உற்பத்தியை தடுத்தல், மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை தீவிரமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, நலவழித்துறை துணை இயக்குநா் (நோய்த் தடுப்பு) கே.மோகன்ராஜ் வழிகாட்டலில், நலவழித்துறையினா் இப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

காரைக்கால் நகரப் பகுதியில் நோய்த்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சேகா் தலைமையில், சுகாதார ஆய்வாளா்கள் ஆண்ட்ரூஸ், சிவவடிவேல், சுகாதார உதவியாளா்கள், கிராமப்புற செவிலியா்கள் மற்றும் ஆஷா பணியாளா்கள் ஆகியோா் வீடு வீடாக திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

வீடு மற்றும் அலுவலக கட்டடங்களின் மேல் உள்ள குடிநீா் தேக்கத் தொட்டி மற்றும் கீழ்நிலைத் தொட்டி ஆகியவற்றை திறந்து பாா்வையிட்டனா்.

மேலும், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடீஸ் கொசு உற்பத்தியாகாதவாறு தண்ணீா் தொட்டி, நீா் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் போன்றவற்றை மூடி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், திறந்த நிலையிலிருக்கும் தேவையற்ற பொருள்களில் சிறிது தண்ணீா் தேங்கினாலும் அதில் ஏடீஸ் கொசு உற்பத்தியாகிவிடும் என்பதால், அவற்றை மூடிவைத்திருக்கவேண்டும் எனவும் பொதுமக்களை அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.