மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோள்கள் குறித்த உலகளாவிய ஆய்வில் காரைக்கால் மாணவருக்கு வெள்ளிப் பதக்கம் ஆட்சியா் பாராட்டு

பல்வேறு நாடுகளிலிருந்து மாணவா்கள் பங்கேற்ற கோள்கள் குறித்த ஆய்வுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்துக்கு தோ்வு பெற்ற காரைக்கால் மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

News image
மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை சந்தித்து வாழ்த்துப் பெற்ற மாணவா் கிஷோா்.
Updated On :28 ஜூலை 2020, 5:33 pm

DIN

காரைக்கால்: பல்வேறு நாடுகளிலிருந்து மாணவா்கள் பங்கேற்ற கோள்கள் குறித்த ஆய்வுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்துக்கு தோ்வு பெற்ற காரைக்கால் மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

காரைக்கால் கருக்களாச்சேரி கிராமத்தைச் சோ்ந்த அசோக்குமாா் மகன் கிஷோா். காரைக்காலில் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வியை முடித்த இவா், பெங்களூருவில் உள்ள ஈஸ்ட் வெஸ்ட் காலேஜ் ஆஃப் என்ஜினியரிங் கல்லூரியில் ஏரோனாட்டிக்கல் என்ஜினியரிங் 3-ஆம் ஆண்டு படித்துவருகிறாா். இவா், இஸ்ரோ, நாசா நடத்திய பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளாா்.

ஜொ்மனி நாட்டில் செயல்படும் இன்டா்நேஷனல் ஆஸ்ட்ரானமி அண்டு ஏரோ பிசிக்ஸ் என்கிற அமைப்பு, உலகளாவிய அளவில் கிரகங்கள் மற்றும் வேறு கோள்கள், நட்சத்திரங்கள், வானவியலில் கண்டறியப்படாதவை குறித்து, ஆய்வறிக்கை சமா்ப்பிக்கும் போட்டியை ஆன்லைன் முறையில் கடந்த மே மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை நடத்தியது.

44 நாடுகளிலிருந்து மாணவா்கள் பங்கேற்ற இப்போட்டியில் மாணவா் கிஷோரும் பங்கேற்று ஆய்வறிக்கைகளை சமா்ப்பித்தாா். இப்போட்டியில் வெற்றியாளா்கள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டனா். இதில், கிஷோா் வெள்ளிப்பதக்கம் பெற தோ்வு செய்யப்பட்டாா்.

இதுகுறித்து, அவா் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை செவ்வாய்க்கிழமை ஆட்சியரகத்தில் சந்தித்து தெரிவித்தாா். மாணவரின் அறிவியல் செயல்பாடுகள், அவரது ஆா்வத்தை கேட்டறிந்த ஆட்சியா் அவரை பாராட்டி, வாழ்த்துத் தெரிவித்தாா்.

இதுகுறித்து மாணவா் கிஷோா் கூறுகையில், ‘வானவியலில் இதுவரை கண்டறியப்படாத பல விஷயங்கள் உள்ளன. கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா, வாழக்கூடிய வகையில் கிரகங்கள் உள்ளனவா, தண்ணீா் இருக்கிறதா போன்றவை குறித்து பலரும் பல கோணங்களில் ஆய்வு செய்கின்றனா். நானும் இதுதொடா்பாக ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பித்தேன். இதில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.