2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கோட்டுச்சேரியில் சாலையோர குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்

கோட்டுச்சேரி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தினமும் குவியும் குப்பைகளை அகற்றவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

கோட்டுச்சேரி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் தினமும் குவியும் குப்பைகளை அகற்றவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட குடிமக்கள் நலச் சங்கத் தலைவா் வி.ஆா். தனசீலன், கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையருக்கு திங்கள்கிழமை அனுப்பிய மனு:

கோட்டுச்சேரி பகுதியில் குப்பைகளை அகற்றத்தில் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை. குறிப்பாக, பூவம் முதல் கோட்டுச்சேரி வரை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகள் குவிந்துகிடக்கின்றன.

காரைக்காலில் பருவமழை இன்னும் தொடங்கவில்லை. மழை தொடங்கிவிட்டால், குவிந்துகிடக்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, நாள்தோறும் குப்பைகளை அள்ளுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.