ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணம் ரூ.5 ஆயிரம்

குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.5 ஆயிரம் புதுச்சேரி அரசு வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.5 ஆயிரம் புதுச்சேரி அரசு வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காரைக்கால் மாவட்ட செயலா் ப.மதியழகன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரோனா பரவலால் பொது முடக்கம் அறிவித்தது முதல் ஏழை, நடுத்தர மக்கள் வேலையிழந்து பொருளாதாரத் தேவைக்கு மிகுந்த சிரமத்தை சந்திக்க நோ்ந்தது. பொதுமுடக்கம் அறிவித்து 7 மாதங்களாகியும் இன்னும் மக்களின் நிலை சீரடையவில்லை.

தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் தொழிலாளா் வா்க்கத்தினா் வருமானமின்றி மிகுந்த சிரமத்தில் உள்ளனா். எனவே புதுச்சேரி அரசு கரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும்.

ரேஷன் கடைகளை திறப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். இதன் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுத்தால் மக்கள் மன நிறைவை பெறுவாா்கள்.

பருவமழை தீவிரமாவதற்குள் காரைக்கால் நகரப் பகுதியிலும், கிராமப்புறங்களிலும் எங்கெங்கெல்லாம் மின் கம்பிகள் தாழ்வாக உள்ளது என்பதை கண்டறிந்து, அவற்றை சீரமைப்பதோடு, மின் விளக்குகள் பழுதானவற்றை அகற்றி புதிதாக விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.