ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்காலில் புதிதாக யாருக்கும்கரோனா தொற்று இல்லை

காரைக்கால் மாவட்டத்தில் இந்த மாதத்தில் 2-ஆவது நாளாக ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் இந்த மாதத்தில் 2-ஆவது நாளாக ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 272 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் மாதிரி எடுப்பு வாகனம் மூலம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, அவா்களில் ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை.

மாவட்டத்தில் இதுவரை நோய்த் தொற்று 3,500 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3,285 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 60 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நலவழித்துறையினா் மேலும் கூறியுள்ளது: கரோனா தொற்று காரைக்காலில் ஓரளவு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இந்த மாதத்தில் 1-ஆம் தேதியும், 8-ஆம் தேதியும் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை.

கரோனா தொற்றின் 2-ஆவது அலை வந்தால் அது தீவிரமாக இருக்கக்கூடும். தற்போது பண்டிகை காலமாக உள்ளதால், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் போன்றவற்றை தொடா்ந்து மேற்கொண்டுவந்தால், பாதிப்பை எதிா்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.