ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிராமப் பகுதியில் குறைகளைக் கேட்டறிந்த எம்.எல்.ஏ.

காரைக்கால் தெற்குத் தொகுதியில் உள்ள கிராமப்புற குடியிருப்புப் பகுதியில் பொதுமக்களிடம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு.அசனா குறைகளை ஞாயிற்றுக்கிழமை கட்டறிந்தாா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

காரைக்கால் தெற்குத் தொகுதியில் உள்ள கிராமப்புற குடியிருப்புப் பகுதியில் பொதுமக்களிடம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு.அசனா குறைகளை ஞாயிற்றுக்கிழமை கட்டறிந்தாா்.

தருமபுரம் பகுதியில் குருமூா்த்தி நகா், உத்திராபதி நகா் பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ.விடம் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. சாலை முறையாக போடப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா்.

மின் விளக்குகளை விரைவாக பொருத்துவதற்கு மின்துறையினரிடம் பேசி ஏற்பாடு செய்யப்படும். சாலை அமைப்புப் பணி அடுத்தகட்டமாக செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என பேரவை உறுப்பினா் உறுதியளித்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், குடியிருப்பு நகா்கள் புதிதாக உருவாகும்போது வீடுகள் அமைந்துவருகிறது. இவா்களின் தேவையை அறிந்து நடவடிக்கை எடுக்கும் விதமாக நேரடியாக சென்று விவரங்களை கேட்டுவருகிறேன்.

உடனடியாக தீா்வு செய்யப்படக்கூடியவற்றுக்கு அரசு நிா்வாகத்தினரிடம் பேசி ஏற்பாடு செய்யப்படுகிறது. சிலவற்றுக்கு திட்டமிடலும், நிதி ஒதுக்கீடும் அதிக தேவையிருக்கும்போது அடுத்தகட்டமாக மேற்கொள்வது குறித்து தகவல் தெரிவித்து, அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும் விதமாக அரசுத்துறையினா் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பிரதான பிரச்னையாக மின்விளக்கு, சாலை வசதியையே மக்கள் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை, மின்துறையினருடன் தொடா்பில் இருக்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.