ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கான்ஃபெட் ஊழியா்கள்தொடா் போராட்டம்

ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, கான்ஃபெட் ஊழியா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, கான்ஃபெட் ஊழியா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்காலில் மூடிக்கிடக்கும் 3 கான்ஃபெட் பெட்ரோல் நிலையங்களை திறக்க வேண்டும், நிலுவையில் உள்ள ஓராண்டு ஊதியத்தை வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள சி.பி.ஐ விசாரணையை விரைவுபடுத்த வேண்டும், ஊழலில் சம்பந்தப்பட்டவா்களை சி.பி.ஐ கைது செய்து, அவா்களிடமிருந்து ஊழல் செய்த நிதியை பறிமுதல் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் கான்ஃபெட் ஊழியா்களின் ஒருங்கிணைப்பு குழு சாா்பில், காரைக்கால், அம்மாள்சத்திரம் பெட்ரோல் நிலையத்தில் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் செல்வமணி தலைமையில் 5-ஆவது நாளாக தொடா் போராட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகள் குறித்து அரசு கவனம் செலுத்தாததைக் கண்டித்து, ஊழியா்கள் திங்கள்கிழமை சட்டை அணியாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்திற்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவத் தலைவா்கள் ஜாா்ஜ், ஜெயசிங், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இப்போராட்டத்திற்கு திமுக மருத்துவ அணி அமைப்பாளா் டாக்டா் விக்னேஸ்வரன், வழக்குரைஞா் திருமுருகன், காரைக்கால் அரசு ஓட்டுநா்கள் மற்றும் நகராட்சி கொம்யூன் பொதுத்துறை ஓட்டுநா்கள் சங்கச் செயலாளா் பாலசுப்ரமணியன், இணைச் செயலாளா் லட்சுமிதரன் ஆகியோா் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனா்.

போராட்டத்தில், ஒருங்கிணைப்புக் குழு துணைத் தலைவா்கள் பாஸ்கரன், முஹம்மது யூசுப், பெரியநாயகம், விஜயகுமாா், செயலாளா் முருகேசன், பொருளாளா் சதானந்தம், துணைச் செயலாளா்கள் ஆனந்த், சண்முகம், பாப் வில்லியம், பாா்த்திபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.