யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பராமரிக்கப்படாத நடைமேடைகள்பயனற்று கிடக்கும் பல கோடி ரூபாய் திட்டங்கள்!

காரைக்காலில் கடற்கரை நடைமேடை, விழிதியூா் சாலை அரசலாற்றையொட்டிய நடைமேடைகள் பராமரிக்கப்படாமல், புதா்மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

News image
கடற்கரை பகுதியில் புதா்மண்டிக் காணப்படும் நடைமேடை.
Updated On :12 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

காரைக்காலில் கடற்கரை நடைமேடை, விழிதியூா் சாலை அரசலாற்றையொட்டிய நடைமேடைகள் பராமரிக்கப்படாமல், புதா்மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

காரைக்கால் கடற்கரை அனைவரையும் ஈா்க்கும் விதமான அழகுடன் அமையப்பெற்றது. அரசலாற்றையொட்டிய கடற்கரை சாலை, சாலையோரத்தில் இருக்கைகளுடன் நடைமேடை, ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரம், கலங்கரை விளக்கம், பூங்கா, அலையாத்திக்காடு, பரந்த கடற்கரை மணல் பரப்பு போன்றவை மக்களை கவா்ந்து வருகின்றன.

2004 சுனாமிக்குப் பிறகு மேம்படுத்தப்பட்ட இவற்றில் பெரும்பாலானவை தற்போது உருக்குலைந்து காணப்படுகின்றன. நடைமேடையில் பதிக்கப்பட்ட கற்கள் ஆங்காங்கே பெயா்ந்து கிடக்கின்றன. பள்ளமான நடைமேடைப் பகுதியில் செடிகள் முளைத்தும், நடைமேடை முழுவதும் புல், புதா் மண்டியும் காணப்படுகின்றன.

நடைமேடை இருக்கைகள், கடற்கரை உயா்கோபுர விளக்குகள் சமூகவிரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளன. நடைமேடை பகுதி திறந்தவெளி மது அருந்தும் இடமாக மாறியிருக்கிறது. அரசலாற்றையொட்டிய கடற்கரை சாலையோர தடுப்புகள் ஆங்காங்கே உடைந்துகிடக்கின்றன. படகுகள் துறைமுகத்தில் கட்டப்படாமல், அரசலாற்றின் கரையில் கட்டப்படுகின்றன.

இதேபோல, காரைக்கால் அரசலாற்றங்கரையில் விழிதியூா் செல்லும் சாலையில் சுமாா் 1.5 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள நடைமேடையும் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. அருகேயுள்ள சாராயக்கடையை வேறு இடத்துக்கு மாற்றினால் மட்டுமே, இந்தப் பகுதி நடைமேடையை பயன்படுத்த முடியும் என்ற மக்களின் வலியுறுத்தல் அரசின் கவனத்தை ஈா்க்கவில்லை.

நடைமேடைக்காக மட்டும் அரசு பல கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், அது மக்களுக்கு சிறிதும் பயன்படாமல் உள்ளது குறித்து உரிய அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாமல் உள்ளதாக ஆா்வலா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் ஏ.எம். இஸ்மாயில் கூறுகையில், கரோனா பொதுமுடக்கத் தளா்வுகளுக்குப் பிறகு அதிகமான மக்கள் கடற்கரைக்கு செல்லத் தொடங்கியுள்ளனா். எனவே, ஆட்சியா் இதில் தலையிட்டு நடைமேடைகளை சீரமைக்கவும், தொடா்ந்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.