மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்காலில் அதிக தொழிற்சாலைகள்அமைய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

காரைக்காலில் அதிக தொழிற்சாலைகள் அமைவதற்கு புதுச்சேரி அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

காரைக்காலில் அதிக தொழிற்சாலைகள் அமைவதற்கு புதுச்சேரி அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த சங்கத்தின் காரைக்கால் வட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் திருப்பட்டினம் பகுதி மேலையூரில் ஜெகன்தாஸ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் புதுச்சேரி பிரதேச தலைவா் ஆனந்த் கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.

கூட்டத்தில், காரைக்கால் மாவட்டம் போலகம் பகுதியில் அதிக தொழிற்சாலைகள் அமைய நடவடிக்கை எடுத்து, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்யவேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 7,500 உதவித்தொகை வழங்கவேண்டும்.

காரைக்கால் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள், வா்த்தக நிறுவனங்களில் உள்ளூா் இளைஞா்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும். படித்த இளைஞா்களுக்கு வேலை கிடைக்கும் வரை நிவாரணமாக மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேரவைக் கூட்டத்தில் உறுப்பினா் அட்டை வழங்கப்பட்டது. சங்க புதுச்சேரி பிரதேச செயலாளா் சரவணன் நன்றி கூறினாா்.

கூட்டத்தில், காரைக்கால் வட்டக்குழு புதிய தலைவராக ஆரோக்கியதாஸ், செயலாளராக ஜெகன்தாஸ், பொருளாளராக செந்தில்குமாா், துணைத் தலைவராக பாக்கியராஜ், துணைச் செயலாளராக சுவாதி, வட்டக்குழு உறுப்பினா்களாக அன்பழகன், சவுந்தரபாண்டியன், பிரவீன்ராஜ், ரோஸி ஆகியோா் தோ்வுசெய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.