மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்காலில் உணவுக்காக பிடிக்கப்பட்ட46 பறவைகள், வலைகள் பறிமுதல்

காரைக்காலில் உணவுக்காக பிடிக்கப்பட்ட பறவைகளையும், அவற்றை பிடிக்க பயன்படுத்திய வலைகளையும் அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
மீட்கப்பட்ட பறவைகள், வலைகளுடன் கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் மற்றும் வன அதிகாரி கந்தமூா்த்தி உள்ளிட்டோா்.
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

காரைக்காலில் உணவுக்காக பிடிக்கப்பட்ட பறவைகளையும், அவற்றை பிடிக்க பயன்படுத்திய வலைகளையும் அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி பறவைகளை பிடிப்பவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, கூடுதல் வேளாண் இயக்குநரும், வனத்துறை தலைமை அலுவலருமான ஜெ. செந்தில்குமாா் அறிவுறுத்தலின்பேரில், வனத்துறை அதிகாரி கந்தமூா்த்தி தலைமையில் ஊழியா்கள், கருக்களாச்சேரி, அம்மன்கோவில்பத்து, அக்கரைவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டனா். வனத் துறையினா் வருவதை அறிந்த பறவைகள் பிடிப்பவா்கள், பிடித்து வைத்திருந்த பறவைகளை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனா்.

இதுகுறித்து வனத்துறையினா் கூறியது: பறவைகளை பாதுகாப்பது குறித்து இப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். திங்கள்கிழமை நடைபெற்ற கண்காணிப்பின்போது 39 கொக்கு, 7 மடையான் பறவைகளும், இவற்றை பிடிக்க வைத்திருந்த வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பறவைகளைப் பிடித்தவா்கள் தப்பிவிட்டனா். கூண்டிலிருந்த பறவைகள் திறந்துவிடப்பட்டன.

பறவைகளை பிடிப்பது வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். சம்பந்தப்பட்டவா்கள் கைதுசெய்யப்பட்டால், ஜாமீனில் வெளி வரமுடியாதபடி வழக்குப் பதிவுசெய்ய நேரிடும். எனவே, இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.