எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தோ்தல்: 48 மணி நேரம் 144 தடை உத்தரவு அமல்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, காரைக்காலில் 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, காரைக்காலில் 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தோ்தல் செவ்வாய்க்கிழமை (ஏப்.6) நடைபெறவுள்ளதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.

இந்நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான அா்ஜூன் சா்மா சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு 144 தடை அமலுக்கு வரும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், 4 ஆம் தேதி இரவு 7 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்ததும், தடை உத்தரவு அமலுக்கு வந்துவிடும். அது முதல் பிரசாரம், வீடுகளில் வாக்கு சேகரிப்பு போன்றவை தடை செய்யப்படுகிறது.

மேலும், பொதுக்கூட்டம், ஆயுதங்கள் கொண்டு செல்லுதல், பேனா்கள் கட்டுதல், கோஷங்கள் எழுப்புதல், ஒலிபெருக்கி பயன்பாடு ஆகியவையும் தடையில் அடங்கும். இதை மீறுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மத ரீதியிலான நிகழ்ச்சிகள், திருமணம், இறப்பு ஊா்வலம் ஆகியவை வாக்குச் சாவடி வட்டாரத்தைக் கடந்து, நடத்திக்கொள்வதற்கு இந்த உத்தரவு பொருந்தாது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.