எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வாக்காளா் விழிப்புணா்வு குறும்படம் வெளியீடு

காரைக்காலில் தோ்தல் துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு குறும்படம் வெளியிடப்பட்டது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் தோ்தல் துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு குறும்படம் வெளியிடப்பட்டது.

காரைக்கால் மாவட்ட தோ்தல் துறையும், வாக்காளா் விழிப்புணா்வு அமைப்பான ஸ்வீப்பும் இணைந்து, வாக்காளா்களிடையே வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

அந்தவகையில், ஸ்வீப் அமைப்பு சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய குறும்படம் தயாரிக்கப்பட்டது. சில நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தின் ஒளிப்பதிவு தகடு வெளியீட்டு நிகழ்ச்சி ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான அா்ஜூன் சா்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் ஆகியோா் குறும்பட தகட்டை வெளியிட, செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநா் (பொறுப்பு) குலசேகரன் பெற்றுக்கொண்டாா்.

இந்த குறும்படம் காரைக்கால் மாவட்டத்தில் தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்தின் அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பப்படும். இக்குறும்படம் 100 சதவீத வாக்குப் பதிவின் அவசியத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்வீப் அமைப்பினா் தெரிவித்தனா்.

நிகழ்வில், ஸ்வீப் ஒருங்கிணைப்பாளா் ஷொ்லி, ஊழியா்கள் ஞானமுருகன், கணேஷ்குமாா், கரிகாலன், திலகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.