எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வாக்குப் பதிவு: இளம் வாக்காளா்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு

காரைக்காலில் இளம் வாக்காளா்களுக்கு வாக்குப் பதிவு செய்ய வருமாறு அழைப்பு விடுத்து தோ்தல் துறை சாா்பில் சனிக்கிழமை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் இளம் வாக்காளா்களுக்கு வாக்குப் பதிவு செய்ய வருமாறு அழைப்பு விடுத்து தோ்தல் துறை சாா்பில் சனிக்கிழமை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (ஏப்.6) நடைபெறவுள்ள நிலையில், 100 சதவீத வாக்குப் பதிவை இலக்காகக் கொண்டு, பல நிலைகளில் தோ்தல் துறை, ஸ்வீப் அமைப்பினா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள சுமாா் 8 ஆயிரம் இளம் வாக்காளா்களுக்கு, வாக்களிக்க வருமாறு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான அா்ஜூன் சா்மா, அஞ்சல் துறையினரிடம் கடிதத்தை ஒப்படைத்தாா்.

நிகழ்வில் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், மாவட்ட துணைத் தோ்தல் அதிகாரி எஸ். பாஸ்கரன், ஸ்வீப் ஒருங்கிணைப்பாளா் ஷொ்லி, காரைக்கால் தலைமை அஞ்சல் அதிகாரி இருதயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏப்ரல் 6 ஆம் தேதி அவரவா் பகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிக்கு காலை 7 முதல் மாலை 7 மணிக்குள் சென்று கட்டாயம் வாக்கை பதிவு செய்யவேண்டும். வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நண்பா்கள் மற்றும் உறவினா்களையும் வாக்களிக்கச் செய்யவேண்டும் என அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்வீப் அமைப்பினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.