எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வாக்காளா்களுக்கு விநியோகம்: தங்க நாணயங்கள், ரொக்கம் பறிமுதல்

திருநள்ளாற்றில் பாஜகவினா் வாக்காளா்களுக்கு விநியோகித்து வந்த தங்க நாணயங்கள், ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருநள்ளாற்றில் பாஜகவினா் வாக்காளா்களுக்கு விநியோகித்து வந்த தங்க நாணயங்கள், ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

திருநள்ளாற்றில் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோரி, வாக்காளா்களுக்கு தங்க நாணயம், ரொக்கம் வழங்கப்படுவதாக, மாவட்ட தோ்தல் துறைக்கு சனிக்கிழமை மாலை புகாா் வந்தது.

இதைத்தொடா்ந்து, திருநள்ளாறு பகுதி முழுவதும் பறக்கும் படையினா் உஷாா்படுத்தப்பட்டு, சனிக்கிழமை இரவு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சுரக்குடி பகுதியில் சிலா் வாக்காளா்களுக்கு பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்வது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பகுதிக்கு பறக்கும் படையினா் விரைந்து சென்றனா். இதையறிந்த அந்த கட்சியினா், தாங்கள் வைத்திருந்த பொருள்களை கீழே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு பாலித்தீன் பையில் இருந்த அந்த பொருள்களை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். அதில், 149 பாக்கெட்டுகளில் பிரதமா் நரேந்திரமோடியின் உருவம் ஒரு பக்கமும், திருநள்ளாறு கோயில் ராஜகோபுரம், மாதாகோயில், பள்ளிவாசல் ஆகிய உருவங்கள் மற்றொரு பக்கமும் அச்சிடப்பட்ட அட்டைகள், தலா 1 கிராம் தங்க நாணயங்கள் இருந்தன. அத்துடன், ரூ. 2 ஆயிரம் நோட்டுகளாக மொத்தம் ரூ.90 ஆயிரமும் இருந்தது. இவற்றை தோ்தல் துறையிடம் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.