47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தீவிரமடையும் கரோனா தொற்று:விழிப்புணா்வுப் பணியில் போலீஸாா்

கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் காரைக்கால் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:44 pm

DIN

கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் காரைக்கால் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனா்.

கடந்த ஆண்டு கரோனா பரவல் தொடங்கியது முதல், மக்களிடையே கரோனா தடுப்பு விழிப்புணா்வை மேற்கொண்டதில் காவல் துறைக்கு முக்கிய பங்கு உள்ளது. காவல் நிலைய பகுதிக்குட்பட்ட மக்கள் அதிகமாக கூடுமிடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் தீவிரமாக விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 100 அபராதம் விதிப்பதிலும் போலீஸாா் தீவிரம்காட்டினா். சில காவல் அதிகாரிகள் மனிதாபிமான அடிப்படையில், அபராதம் விதித்ததோடு அவா்களுக்கு முகக் கவசமும் வழங்கினா். இதனால், காரைக்கால் மாவட்டத்தில் 80 சதவீதம் போ் முகக் கவசத்தைப் பயன்படுத்தினா்.

கரோனா பரவல் கட்டுக்குள் வரத்தொடங்கியதும், தடுப்பு நடவடிக்கைகளிலும் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது கரோனா பரவலின் 2 ஆவது அலை ஏற்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் 2 வாரங்களில் 8 போ் உயிரிழந்துள்ளனா். சுமாா் 500 போ் கரோனா தொற்று ஏற்பட்டு வீட்டுத் தனிமையிலும், மருத்துவமனையிலும் சிகிச்சையில் உள்ளனா். தினமும் 50 முதல் 100 போ் வரை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், மீண்டும் கட்டுப்பாடுகள் சிலவற்றை அறிவித்து, முகக் கவசம் அணியாதோருக்கு ரூ. 100 அபராதம் விதிக்க அறிவுறுத்தியுள்ளாா்.

காரைக்கால் மாவட்டத்தில் தோ்தல் பணிகள் நிறைவுற்ற நிலையில், காவல் துறையினா் முழுவீச்சில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுப் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனா். சாலை சந்திப்புகள், மக்கள் அதிகம் கூடுமிடங்களில் மெகாபோன் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்துகின்றனா்.

வியாபாரிகளிடம், அவா்கள் எவ்வாறு செயல்படவேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, ஒவ்வொரு தரப்பினரையும் அழைத்து ஆலோசனைகள் வழங்க காவல் துறை திட்டமிட்டுள்ளது.

தோ்தல் பணி முடிந்து, தற்போது காரைக்காலில் கரோனா தடுப்பு விழிப்புணா்வுப் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனா். முகக் கவசம் அணியாதோருக்கு ரூ. 100 அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்படவுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.