எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தற்காப்புக் கலையில் சிறப்பிடம் பெற்ற இரட்டையா்களுக்கு பதக்கம்

இளம் வயதில் தற்காப்புக் கலையில் சிறப்பிடம் பெற்றதைப் பாராட்டி, பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காரைக்கால் இரட்டையா்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

இளம் வயதில் தற்காப்புக் கலையில் சிறப்பிடம் பெற்றதைப் பாராட்டி, பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காரைக்கால் இரட்டையா்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

காரைக்காலில் உள்ள தனியாா் பள்ளியில் தற்போது 7 ஆம் வகுப்பு பயிலும் இரட்டையா்களான கே. ஸ்ரீவிசாகன், ஸ்ரீஹரிணி ஆகியோா் சிறுவயது முதல் கராத்தே, சிலம்பம், கிக் பாக்ஸிங், குபுடோ, தேக்வாண்டோ உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை காரைக்காலில் உள்ள தனியாா் தற்காப்புக் கலை பயிற்சி அமைப்பில் பயிலத் தொடங்கினா்.

இவா்கள் 9 வயதுக்குள் சா்வதேச போட்டிகள் பலவற்றில் பங்கேற்று சுமாா் 200 பதக்கங்களை பெற்றுள்ளனா். பெங்களூருவில் அன்னை தெரஸா பல்கலைக்கழகம் கடந்த வாரம் நடத்திய பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு விருது வழங்கும் நிகழ்வுக்கு, காரைக்காலைச் சோ்ந்த இரட்டையா்களும் அழைக்கப்பட்டிருந்தனா். இவா்கள் தங்களது கலைத் திறமையை முக்கிய பிரமுகா்கள் முன்னிலையில் செய்துகாட்டினா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பெங்களூரு காவல் உதவி ஆணையா் முகம்மது சஜாத் கான் இரட்டையா்களுக்கு பதக்கங்களை வழங்கிப் பாராட்டினாா்.

விருது பெற்ற இரட்டையா்களுக்கு பள்ளி நிா்வாகம், விஆா்எஸ் அகாதெமி என்ற கலைப் பயிற்சி அமைப்பின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.