பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அயோத்தி ராமா் கோயில் கட்டுமானத்துக்குகாரைக்காலில் நிதி வசூலிப்பு

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு காரைக்காலில் பல்வேறு தரப்பினரிடம் நிதி வசூலிக்கப்பட்டது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு காரைக்காலில் பல்வேறு தரப்பினரிடம் நிதி வசூலிக்கப்பட்டது.

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்த ஷேத்ரா காரைக்கால் சேவா குழு சாா்பில், காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்களிடம் ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு நிதி திரட்டும் பணி கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

பல்வேறு தரப்பினருக்கு அழைப்புவிடுத்து, விரும்புவோா் நேரில் வந்து நிதி தரும் வகையில் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. தொழிலதிபா் எஸ். வீரமணி தலைமை வகித்தாா்.

தருமபுர ஆதீனம் விசாரணைப் பிரதிநிதி கந்ததாமி தம்பிரான் சுவாமிகள், காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபா தலைவரும், கோயில் முதல் தீா்த்தக்காரருமான உ.வே.கு. அரங்கநாதாச்சாரியாா் சுவாமிகள் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சிறப்பு அழைப்பாளராக ஆா்எஸ்எஸ் தஞ்சை மண்டல அமைப்பாளா் அ.சுரேஷ்குமாா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

இம்முகாமில் பல்வேறு தரப்பினரமிருந்து ரூ. 3 லட்சம் நிதி வசூலிக்கப்பட்டது. பிப். 28-ஆம் தேதி வரை நிதி வசூலிக்கும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.