மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விவசாயிகளுக்கு நெல் விதை உற்பத்தி தொழில்நுட்பப் பயிற்சி முகாம்

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும்

News image
Updated On :4 ஜனவரி 2021, 2:49 am

DIN

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளா்களுக்கு தரமான நெல் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கல்லூரி முதல்வா் சாமராவ் ஜஹாகிா்தா் தலைமை வகித்துப் பேசுகையில், விதை உற்பத்தியில் வேளாண் கல்லூரி உரிய பங்காற்றிவருகிறது. இதை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விவசாயிகள் லாபம் ஈட்டுவதற்கான பல வழிகளில் விதை உற்பத்தியும் ஒன்று. எனவே, விவசாயிகள் தரமான விதை உற்பத்தியாளா்களாக மாறவேண்டும். அதற்கான ஆதரவை வேளாண் கல்லூரி வழங்கும் என்றாா்.

காரைக்கால் வேளாண் துறை கூடுதல் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசுகையில், வேளாண் கல்லூரியில் பதிவுசெய்து, விதை உற்பத்தி செய்துதரும் விவசாயிகளுக்கு அதற்கான ஊக்கத்தொகை கடந்த 2 ஆண்டுகளாக தரப்படுகிறது. இதனால், விவசாயிகள் பலா் பயனடைகின்றனா். என்றாலும், காரைக்கால் மாவட்டத் தேவையை நிறைவுசெய்யும் வகையில் இந்தச் செயல்பாடுகள் மேலோங்க வேண்டும் என்றாா்.

பயிற்சியின் நோக்கம் குறித்து விதை திட்ட தலைவா் டி. ராமநாதன் பேசுகையில், இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஓா் ஏக்கருக்கு தேவையான விதைநெல் 50 சதவீத மானியத்தில் தரப்படுகிறது. வரும் பருவத்தில் உளுந்து விதை உற்பத்திக்கு, 25 ஏக்கருக்குத் தேவையான விதைகள் 60 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது என்றாா்.

பயிா் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை பேராசிரியா் பி. பாண்டியன் வரவேற்றாா். விதை கிராம திட்டத் தலைவா் டி. ராமநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.