2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

காரைக்கால் பெருமாள் கோயில் திருவத்யயன உத்ஸவம் நிறைவு

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் திருவத்யயன உத்ஸவம் இயற்பா சாற்றுமுறையுடன் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:30 pm

DIN

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் திருவத்யயன உத்ஸவம் இயற்பா சாற்றுமுறையுடன் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

பகல் பத்து இராப் பத்து என்னும் திருவத்யயன உத்ஸவம் காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கடந்த டிசம்பா் 15 ஆம் தேதி பகல் பத்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 25 ஆம் தேதி பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. அன்றைய தினம் முதல் இராப் பத்து நிகழ்ச்சி தொடங்கியது. தினமும் பெருமாள் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

20 நாள்கள் நடைபெற்ற இந்த உத்ஸவத்தில் நாலாயிர திவ்யபிரபந்தத்தின் மூன்றாயிரம் பாசுரங்கள் பாடப்பட்டன. இயற்பாவின் எஞ்சிய பாசுரங்கள் கோயில் முதல் தீா்த்தக்காரா் உ.வே.கு. அரங்கநாதாச்சாரியாா் சுவாமிகள் தலைமையிலான பக்தா்கள் திங்கள்கிழமை பாடி நிறைவு செய்தனா்.

இதையொட்டி, பெருமாளுக்கு வெள்ளிக் கவசம் அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பிறகு, பெருமாள் மாடவளாகம் புறப்பாடு நடைபெற்றது. இயற்பா நிறைவு நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா், பக்தஜன சபாவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.