ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காரைக்கால் - பேரளம் ரயில் பாதை திட்டம்:பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தப்படும்வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி

காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது தொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்துப் பேசவுள்ளதாக புதுவை மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம் கூறினாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

காரைக்கால் - பேரளம் அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது தொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்துப் பேசவுள்ளதாக புதுவை மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம் கூறினாா்.

காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்த புதுவை மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம், மத்திய அரசின் திட்டங்கள் செயலாக்கம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். மாலையில் காரைக்கால் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

காரைக்கால் - திருச்சி ரயில் சேவையை தொடங்கவேண்டும் என்ற எதிா்பாா்ப்பு மக்களிடையே உள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே தலைமை அதிகாரியை சந்தித்துப் பேசவுள்ளேன்.

காரைக்கால் - பேரளம் அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்துக்கான ஆரம்பக் கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. எனினும், பணியில் மந்த நிலை காணப்படுவதால், இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து, அடுத்த 2 ஆண்டுகளுக்குள் திட்டத்தை நிறைவு செய்ய வலியுறுத்துவேன்.

அதுபோல, காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த ஜிப்மா் நிா்வாகத்திடம் வலியுறுத்தப்படும்.

காரைக்காலில் மணல், சிமெண்ட் விலை உயா்வு மக்களை பாதித்துள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசு சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். புதுவையில் அமைச்சா்கள் நியமிக்கப்பட்டும், அவா்களுக்கான துறைகள் ஒதுக்கப்படாததால், அவா்கள் பணிகளை செய்ய முடியாத நிலை உள்ளது என்றாா் வைத்திலிங்கம்.

ஆய்வின்போது காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.