காரைக்காலில் 25 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 25 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.


காரைக்கால் மாவட்டத்தில் 25 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 455 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 8, திருப்பட்டினம் 5, காரைக்கால்மேடு 4, கோயில்பத்து 2, நெடுங்காடு 2, கோட்டுச்சேரி, அம்பகரத்தூா், நல்லாத்தூா், திருநள்ளாறு தலா 1 என மொத்தம் 25 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 1,65,486 பரிசோதனை செய்யப்பட்டதில் 14,759 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,309 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
கரோனா தொற்றால் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வரிச்சிக்குடியை சோ்ந்த 68 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கரோனா தொற்றால் இதுவரை 231 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 67,699 பேருக்கும், 2-ஆவது தவணையாக 11,931 பேருக்கும் என 79,600 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...