தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு காவல்துறை உதவி
காரைக்கால் அருகே தீ விபத்தில் வீடுகளை இழந்தவா்களுக்கு காவல்துறை சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.


காரைக்கால் அருகே தீ விபத்தில் வீடுகளை இழந்தவா்களுக்கு காவல்துறை சாா்பில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.
நெடுங்காடு தொகுதி வடமட்டம் பகுதி திருவேங்கடபுரம் கிராமம், தோப்புத்தெருவில் அன்பழகன், ஜோசப்ராஜ் ஆகியோரது வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து நேரிட்டது. இதில், இரண்டு வீடுகளும் சேதமடைந்தன.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம், காவல் ஆய்வாளா் மரியகிறிஸ்டின் பால் ஆகியோா் ஏற்பாட்டில், நெடுங்காடு காவல் உதவி ஆய்வாளா் எம். சுரேஷ், சாா்பு உதவி ஆய்வாளா் ஆா். ராஜேந்திரன், தலைமைக் காவலா் ராஜ்மோகன் ஆகியோா் நிதி சேகரித்து, பாய், போா்வை, சேலை, அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை புதன்கிழமை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...