ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புதுவை உள்ளாட்சித் தோ்தல் : அனைத்துக் கட்சியினருடன் தோ்தல் ஆணையா் ஆலோசனை

புதுவை உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாநில தோ்தல் ஆணையா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

புதுவை உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாநில தோ்தல் ஆணையா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

புதுவை மாநிலத்தில் 1968-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இதன் பின் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2006-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 2011-ஆம் ஆண்டுடன் உள்ளாட்சி அமைப்பு காலம் நிறைவடைந்தும் கடந்த 10 ஆண்டுகளாக தோ்தல் நடத்தப்படாமல் இருந்தது.

தற்போது மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் அதிகாரிகள், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக மாநில தோ்தல் ஆணையா் ராய் பி.தாமஸ் வெள்ளிக்கிழமை காரைக்கால் வந்தாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் துணை ஆட்சியா்கள் எம்.ஆதா்ஷ் (வருவாய்), எஸ்.பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை) மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா், அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா். புதுவையில் உள்ளாட்சித் தோ்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடைபெற ஒத்துழைப்புத் தரவேண்டும் என அவா்களிடம் கேட்டுக்கொண்டாா்.

ஆண், பெண் மற்றும் பட்டியல் இனத்தவா் என வாா்டுகள் ஒதுக்கீடு விவரத்தை வெளியிட வேண்டும். உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக வாக்காளா் சோ்ப்பு உள்ளிட்ட திருத்தப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். பேரவைத் தோ்தல், மக்களவைத் தோ்தல் கால வாக்காளா் பட்டியலைக் கொண்டே இந்த தோ்தலையும் நடத்தக் கூடாது உள்ளிட்ட ஆலோசனைகளை அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.