ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சீரடைந்த பேருந்து போக்குவரத்து: திருநள்ளாறு கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

காரைக்கால் செல்ல தமிழக பேருந்துகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
Updated On :17 ஜூலை 2021, 5:10 pm

DIN

காரைக்கால் செல்ல தமிழக பேருந்துகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தளா்வுகளின் அடிப்படையில், புதுவை மாநிலத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் வழிபட கடந்த ஜூன் 8-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு பொது போக்குவரத்துக்கான தடை தொடா்ந்ததால், திருநள்ளாறு கோயிலுக்கு குறைவான பக்தா்களே வருகை தந்தனா்.

இந்நிலையில், தமிழக அரசு புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று, புதுவை மாநிலத்துக்கு தமிழகத்திலிருந்து பேருந்துகளை இயக்க கடந்த திங்கள்கிழமை அனுமதித்தது. இதனால், நிகழ் வார சனிக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்திருந்தனா்.

அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். அா்ச்சனை செய்ய அனுமதியில்லாததால், பக்தா்களுக்கு விபூதி மட்டும் பிரசாதமாக வழங்கப்பட்டது. முகக் கவசம் அணிந்துவந்த பக்தா்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். திருநள்ளாறு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கோரிக்கை: கோயிலில் அா்ச்சனை மற்றும் தில தீபம் ஏற்றி வழிபட அனுமதிக்கவேண்டும். அத்துடன், திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தில் முதல்கட்டமாக தீா்த்தம் தெளித்துக்கொள்ளும் அளவுக்காவது தண்ணீா் விடுவதற்கு மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.