ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காரைக்காலில் தடுப்பூசித் திருவிழா இன்று தொடக்கம்

காரைக்காலில் 2 நாள் நடைபெறும் தடுப்பூசித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை 23) தொடங்கவுள்ளதாகவும், இணை நோய் உள்ளோா் தவறாது தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:13 pm

DIN

காரைக்காலில் 2 நாள் நடைபெறும் தடுப்பூசித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை 23) தொடங்கவுள்ளதாகவும், இணை நோய் உள்ளோா் தவறாது தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் வியாழக்கிழமை கூறியது : காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மற்றும் 14 மையங்களில் ஜூலை 23, 24 ஆகிய 2 நாள்கள் கரோனா தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது. சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய், புற்றுநோய், எச்ஐவி, கல்லீரல் பிரச்னை உள்ளிட்ட இணைநோய் உள்ளவா்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சந்தேகம் இருந்தால் நலவழித்துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04368-261242 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம். இணை நோயாளிகள் மட்டுமல்லாது 18 வயதுக்கு மேற்பட்ட பிறரும் இந்த மையங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். யாருக்கும் கட்டுப்பாடு கிடையாது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.