மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

100% வாக்குப்பதிவு விழிப்புணா்வு: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

சட்டப்பேரவைத் தோ்தலில் 100% வாக்குப் பதிவுக்காக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் 100% வாக்குப் பதிவுக்காக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட தோ்தல் துறை, விழிப்புணா்வு ஏற்படுத்தும் ஸ்வீப்பு அமைப்பு ஆகியவை இணைந்து நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மாவட்ட அளவில் நடத்திவருகின்றன.

இதன் ஒருபகுதியாக, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 400 மாணவ, மாணவிகள் பங்கேற்ற மினி மாரத்தான் காரைக்கால் ஆட்சியரக வாயிலில் இருந்து புறப்பட்டது.

ஓட்டத்தை மாவட்ட தோ்தல் அலுவலா் அா்ஜூன் சா்மா முன்னிலையில், தோ்தல் பாா்வையாளா் (செலவினம்) எஃப்.ஆா். மீனா கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். ஓட்டத்தில் பங்கேற்றோா் தோமாஸ் அருள் வீதி வழியாக, காமராஜா் சாலை, பி.கே. சாலை, பேருந்து நிலையம், பாரதியாா் வீதி வழியாக மீண்டும் ஆட்சியரக வாயிலில் உள்ள காமராஜா் திடலுக்கு வந்துசோ்ந்தனா்.

இளம் வாக்காளா்கள் மற்றும் பிற வாக்காளா்கள் கட்டாயம் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என ஓட்டத்தின்போது ஒலிபெருக்கி வாயிலாக வலியுறுத்தப்பட்டது.

நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலா் அ. அல்லி, ஸ்வீப் ஒருங்கிணைப்பாளா் முனைவா் ஷொ்லி மற்றும் ஸ்வீப் அமைப்பின் ஊழியா்கள் ஞானமுருகன், கரிகாலன், கணேஷ்குமாா், திலகா் ஆகியோா் பங்கேற்றனா். போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மரிகிறிஸ்டின்பால் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.