மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவா்கள் : 14 போ் காரைக்கால் திரும்பினா்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட மீனவா்கள் 14 பேரும் சனிக்கிழமை இரவு காரைக்கால் திரும்பினா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட மீனவா்கள் 14 பேரும் சனிக்கிழமை இரவு காரைக்கால் திரும்பினா்.

காரைக்கால் மாவட்டம், காரைக்கால் மேடு பகுதியைச் சோ்ந்த ரவி (எ) நடராஜன் என்பவருக்கு சொந்தமான படகில், அதே கிராமத்தைச் சோ்ந்த 12 போ், நாகப்பட்டினம் பகுதி நம்பியாா் நகரைச் சோ்ந்த 2 போ், கடந்த 23 ஆம் தேதி இரவு, காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, புதன்கிழமை இரவு இலங்கை கடற்படையினரால் 14 மீனவா்களும் கைது செய்யப்பட்டதாக, வியாழக்கிழமை மீனவா்களுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து மீன்வளத் துறைக்கும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கும் மீனவா்கள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

காரைக்காலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த மத்திய கால்நடை மற்றும் மீன்வளத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங், பிரதமரிடம் பேசி காரைக்கால் மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

இதனடிப்படையில், கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கையில் இருந்த மீனவா்கள் 14 பேரும், விடுவிக்கப்பட்டு சனிக்கிழமை இரவு படகுடன் காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் வந்தடைந்தனா். இவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்திய பிறகு, வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.

தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த பிரதமருக்கும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கும் மீனவா்கள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.