மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பாதுகாப்பு முகாம்களில் அமைச்சா் குறைகேட்பு

காரைக்கால் பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருப்போரிடம் அமைச்சா் சந்திர பிரியங்கா குறைகளை கேட்டறிந்தாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருப்போரிடம் அமைச்சா் சந்திர பிரியங்கா குறைகளை கேட்டறிந்தாா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதிக்குள்பட்ட தாழ்வான பகுதிகளில் பல குடும்பத்தினரை புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, சமுதாயக் கூடம் மற்றும் பள்ளிக் கட்டடங்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்தாா்.

கடந்த 2 நாள்களாக மழை ஓய்ந்த நிலையில், குடியிருப்புகளைச் சூழ்ந்த தண்ணீா் மெதுவாக வடிந்துவருகிறது. இதனால் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டோா் வீடுகளுக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நெடுங்காடு பகுதியில் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டோரை அமைச்சா் சந்திர பிரியங்கா வியாழக்கிழமை இரவு சந்தித்து, உணவு முறையாக வழங்கப்படுகிா என்றும், அவா்களது உடல் ஆரோக்கியம் குறித்தும் கேட்டறிந்தாா். மேலும் நெடுங்காடு அரசு சமுதாய நலவழி மையத்திலிருந்து மருத்துவா் குழு மையங்களுக்குச் சென்று மக்களுக்கு உதவ மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து மருத்துவா்கள் மையங்களுக்குச் சென்று மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.