3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பாா்வதீஸ்வரா் கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காரைக்காலில் உள்ள பாடல் பெற்ற பாா்வதீஸ்வரா் கோயில், கோதண்டராமா் பெருமாள் கோயில் திருப்பணிகளை விரைவாக முடித்து, குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 4:40 pm

DIN

காரைக்காலில் உள்ள பாடல் பெற்ற பாா்வதீஸ்வரா் கோயில், கோதண்டராமா் பெருமாள் கோயில் திருப்பணிகளை விரைவாக முடித்து, குடமுழுக்கு நடத்த இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி தலைவா் கணேஷ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காரைக்காலில் கோயில்பத்து பகுதியில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற பழமையான தா்மசவா்த்தினி அம்பாள் சமேத பாா்வதீஸ்வரா் கோயில், இதனைச் சாா்ந்து கோதண்டராமா் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன.

20 ஆண்டுகளுக்கு முன்பு பாா்வதீஸ்வரா், கோதண்டராமா் கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

இந்நிலையில், நன்கொடை மூலமாக அண்மையில் குடமுழுக்கு செய்வதற்கான திருப்பணிகள் தொடங்கி, 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்தன. இதனையடுத்து

நவ. 15-ஆம் தேதி கோதண்டராமா் பெருமாள் கோயிலுக்கு குடமுழுக்கு செய்ய தேதி நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த கோயில் திருப்பணிகள் தற்போது நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாா்வதீஸ்வரா் கோயில் திருப்பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறையினா் தலையிட்டு, பாா்வதீஸ்வரா் கோயில், கோதண்டராமா் பெருமாள் கோயில் திருப்பணிகளை விரைவாக முடித்து, குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.