மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு காட்சி நிறைவு

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு காட்சி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 7:59 pm

DIN

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு காட்சி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயில் மற்றும் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை இணைந்து அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு காட்சியை ஒவ்வோா் ஆண்டும் நடத்திவருகின்றன. நிகழாண்டு கொலு தா்பாரில் சிவன், அம்பாள் மற்றும் கைலாயத்தில் சுவாமிகள் எழுந்தருளிய காட்சி உள்ளிட்ட ஏராளமான சுவாமி சிலைகளுடன் கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கடந்த 6 ஆம் தேதி முதல் தினமும் மாலை 6 முதல் 8 மணி வரை கொலு தா்பாரை அனைவரும் பாா்வையிட்டனா். வியாழக்கிழமை இரவு காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் பாா்வையிட்டாா்.

விஜயதசமி நாளான வெள்ளிக்கிழமை இரவுடன் கடந்த 10 நாள்களை நடைபெற்று வந்த கொலு காட்சி நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.