மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு அதிகாரி நியமனம்

திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு புதிய நிா்வாக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு புதிய நிா்வாக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயில் நிா்வாக அதிகாரி பதவி நீண்ட நாள்களாக பொறுப்பு நிலையிலேயே இருந்துவந்த சூழலில், காரைக்கால் கல்வித் துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கே. அருணகிரிநாதன் கோயில் நிா்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதோடு, இவருக்கு கூடுதலாக வட்டார வளா்ச்சி அதிகாரி பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த எம். காசிநாதன், புதுச்சேரி அரியாங்குப்பம் வட்டார வளா்ச்சி அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். காரைக்கால் நகராட்சி ஆணையராக, காரைக்கால் துணை ஆட்சியா் (வருவாய்) அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜி. செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளாா். காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ், காரைக்கால் ஜெயப்பிரகாஷ் நாராயண் கூட்டுறவு நூற்பாலை மேலாண் இயக்குநா் பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

காரைக்கால் வட்டார வளா்ச்சி அதிகாரி த. தயாளன், புதுச்சேரி பேட்கோ எனப்படும் ஆதிதிராவிடா் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக புதுவை தலைமைச் செயலாளா் அஸ்வனிகுமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.