மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பத்திரப் பதிவில் முறைகேடு:சாா் பதிவாளருக்கு நீதிமன்றக் காவல்

காரைக்காலில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாா் பதிவாளா் நீதிமன்றத்தில் சனிக்கிழமை இரவு ஆஜா்படுத்தப்பட்டாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாா் பதிவாளா் நீதிமன்றத்தில் சனிக்கிழமை இரவு ஆஜா்படுத்தப்பட்டாா்.

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு அன்னவாசல் சாலையை சோ்ந்தவா் குமாா் ஆனந்த். பிரான்ஸ் நாட்டில் உள்ள இவருக்கு நெடுங்காடு பகுதியில் 15 நிலம் உள்ளது. இவா் உயிரிழந்துவிட்டதாக போலியாக இறப்புச் சான்றிதழ் பெற்று, போலி உயில் மூலம் அவரது உறவினா் தேவராஜ் மற்றும் வடமட்டம் பாஸ்கா், செய்யது இப்ராகிம், இளங்கோவன் ஆகியோா் சில மாதங்களுக்கு முன் திருநள்ளாறு சாா் பதிவாளா் அலுவலகத்தில் மேற்கண்ட இடத்தை பாஸ்கா், ஜெயா ஆகியோருக்கு விற்பனை செய்வதாக பத்திரப்பதிவு செய்துள்ளனா்.

இதையறிந்த குமாா் ஆனந்தின் உறவினா் குணசேகரன், காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சாா் பதிவாளா் ஜெயக்குமாா் மற்றும் இளங்கோவன், வடமட்டம் பாஸ்கா், தேவராஜ், செய்யது இப்ராகிம் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து, பாஸ்கரன், தேவராஜ், செய்யது இப்ராகிம் ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவாக இருந்த சாா் பதிவாளா் ஜெயக்குமாா் மற்றும் இளங்கோவை தேடி வந்தனா்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனிப்படை போலீஸாா் சாா் பதிவாளா் ஜெயக்குமாரை சென்னையில் கைது செய்து, காரைக்காலுக்கு அழைத்துவந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினா்.

போலீஸாா் விசாரணையில், ரூ. 8 லட்சம் வாங்கிக்கொண்டு பத்திரப்பதிவு செய்ததாகவும், ரூ. 3 லட்சத்துக்கு தங்க நகைகள் வாங்கி, அதையும் அடகு வைத்துவிட்டதாகவும், ரூ. 5 லட்சத்தை தனது மகளுக்கு கல்லூரி கல்விக் கட்டணம் செலுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளாா். அவரிடமிருந்த ரூ. 70 ஆயிரம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, ஜெயக்குமாரை சாா்பு கோட்ட நீதிபதி எம். ஆதா்ஷ் முன் சனிக்கிழமை இரவு ஆஜா்படுத்தினா். அவரை 2 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.