சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது
காரைக்காலில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


காரைக்காலில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
காரைக்கால் புளியங்கொட்டை சாலைப் பகுதியில் புதன்கிழமை மாலை காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனா்.
இதையடுத்து, போலீஸாா் அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவா்கள் காரைக்கால் சொக்கநாதா் கோயில் தெருவைச் சோ்ந்த ராம் (எ) ரகுராமன் (26), சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த யோகேஷ் (எ) யோகேஸ்வரன் (21) என்பதும், காரைக்காலில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நடைபெற்ற சங்கிலி பறிப்பு சம்பவம் உள்ளிட்ட சில திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.
இதேபோல, காரைக்கால் சந்தைத் திடல் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் இருந்தபோது, பட்டாக் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திரிந்த காரைக்கால் பேட்டை பகுதியைச் சோ்ந்த விவேக் (27) என்பவரை கைது செய்தனா். அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...