மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தமிழ்ப் புத்தாண்டு: காரைக்கால் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி ,காரைக்கால் பகுதியில் உள்ள கோயில்களில் திரளான பக்தா்கள் வியாழக்கிழமை வழிபட்டனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி ,காரைக்கால் பகுதியில் உள்ள கோயில்களில் திரளான பக்தா்கள் வியாழக்கிழமை வழிபட்டனா்.

சுபகிருது ஆண்டு வியாழக்கிழமை பிறந்துள்ளது. இதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தா்பாரண்யேஸ்வரா், பிரணாம்பிகை அம்மன், விநாயகா், சுப்பிரமணியா், தியாகராஜா் சந்நிதியில் மரகதலிங்கம் மற்றும் சனீஸ்வர பகவான் சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

காரைக்கால் அம்மையாா் கோயிலிலும் சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் பங்கேற்றனா். காரைக்கால் ஏழை மாரியம்மன், கடைத்தெரு மாரியம்மன் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் பால் குடம் எடுத்து தரிசனம் செய்தனா். திருநள்ளாறு செல்லும் வழியில் உள்ள வழிகரை மாரியம்மன் கோயிலில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் மூலவரான ரங்கநாத பெருமாளுக்கும், உத்ஸவா் நித்யகல்யாணருக்கும் வஜ்ராங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தமிழ்ப் புத்தாண்டு நாள் உள்ளிட்ட ஆண்டுக்கு 3 நாள்கள் மட்டும் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில், திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோயில் உள்ளிட்டவைகளிலும் சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.