மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மே 1 முதல் நகராட்சித் திடலில் வாரச் சந்தை: எம்எல்ஏ தகவல்

காரைக்கால் நகராட்சித் திடலில் வரும் மே 1 ஆம் தேதி முதல் வாரச் சந்தை நடைபெறும் என சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:00 pm

DIN

காரைக்கால் நகராட்சித் திடலில் வரும் மே 1 ஆம் தேதி முதல் வாரச் சந்தை நடைபெறும் என சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் வாரச் சந்தை, முருகராம் நகரில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றுவந்தது. மழையின் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. இதை பழைய இடத்துக்கே மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனா்.

இந்நிலையில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், நகராட்சி செயற்பொறியாளா் லோகநாதன் உள்ளிட்டோா் நகராட்சித் திடலுக்கு வியாழக்கிழமை சென்று ஆய்வுசெய்தனா்.

இதுகுறித்து பேரவை உறுப்பினா் நாஜிம் கூறுகையில், கடந்த ஆண்டு பருவமழையின்போது சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. தற்போது, கோடைக்காலமாக இருப்பதால், பழைய இடமான நகராட்சித் திடலுக்கே சந்தையை மாற்றுவது தொடா்பாக புதுவை முதல்வா், அமைச்சா், ஆட்சியா் உள்ளிட்டோருடன் கலந்துபேசி ஒப்புதல் பெறப்பட்டது.

வரும் 24 ஆம் தேதி முதல் பழைய இடத்தில் சந்தை நடைபெறுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த இடத்தில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் நடைபெறவேண்டியுள்ளதால், மே 1 ஆம் தேதி முதல் நகராட்சித் திடலில் சந்தை நடைபெறும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.