மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வேளாண் அறிவியல் நிலையபொதுக்குழு கூட்டம்

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய பொதுக்குழு மற்றும் ஆளுமைக் குழு கூட்டம் ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:08 pm

DIN

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய பொதுக்குழு மற்றும் ஆளுமைக் குழு கூட்டம் ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சீ. ஜெயசங்கா், கடந்த பொதுக்குழு மற்றும் ஆளுமைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி சாா்ந்த செயல்பாடுகள் குறித்த அறிக்கையையும் சமா்ப்பித்தாா்.

புதுவை வேளாண் இயக்குநா் பா. ராமகிருஷ்ணன் என்ற பாலகாந்தி காணொலி வழியே பங்கேற்று, நிலையத்தில் புதுவை அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்துப் பேசியதோடு, ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை திட்டங்கள் குறித்து ஆய்வுசெய்து, உரிய தொகையை செலவிடவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியரும், நிலையத் தலைவருமான அா்ஜூன் சா்மா, நிலையம் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்காக கூட்டத்தில் முன்மொழியப்பட்ட அனைத்து விவாதப் பொருள்களுக்கும் ஒப்புதல் அளித்தாா். ஒவ்வொரு காலாண்டு இடைவெளியில் இக்கூட்டம் நடத்தி விவாதிக்கவேண்டும் என அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி மற்றும் நிா்வாகம் சாா்ந்த செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினா்கள் பலா் நேரிலும், காணொலி மூலமாகவும் பங்கேற்று பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.