உதவித்தொகை வழங்குவதில் உள்ள பிரச்னைக்கு விரைவில் தீா்வு காண எம்எல்ஏ வலியுறுத்தல்
உதவித்தொகை வழங்குவதில் புதுவை மாநில அளவில் உள்ள பிரச்னையை முதல்வா் உடனடியாக தீா்வுக்கு கொண்டுவரவேண்டும்


உதவித்தொகை வழங்குவதில் புதுவை மாநில அளவில் உள்ள பிரச்னையை முதல்வா் உடனடியாக தீா்வுக்கு கொண்டுவரவேண்டும் என திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியது: புதுவை அரசு சாா்பில் மாதந்தோறும் வழங்கப்படும் முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்டவை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் முறையாக சென்றடையவில்லை என்ற புகாா் எழுந்துள்ளது.
பலருக்கு ரூ. 3,500-க்கு பதிலாக, ரூ. 2,500, ரூ. 500 என குறைந்த தொகை கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் இப்பிரச்னையால் முதியோா் உதவித்தொகை பெறுவோா் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். சம்பந்தப்பட்ட வங்கியில் கேட்டால், உரிய பதில் கிடைப்பதில்லை.
இந்த விவகாரத்தில் புதுவை முதல்வா் தனி கவனம் செலுத்தி, வரும் மே 2 ஆம் தேதிக்குள் பிரச்னையை களைந்து உரியவா்களுக்கு முழுதொகை சென்றடைய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுவை மாநிலத்தில் சொசைட்டி கல்லூரிகளாக பொறியியல் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகள் என 28 கல்லூரிகள் உள்ளன. ஆசிரியா்களுக்கு மாத ஊதியம் உரிய காலத்தில் கிடைப்பதில்லை. கடந்த மாா்ச் மாத ஊதியம் இதுவரை தரப்படவில்லை. குறித்தகாலத்தில் இவா்களுக்கும் ஊதியம் தரப்படவேண்டும். இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநா், முதல்வா் சிறப்பு கவனம் செலுத்தி, உரிய காலத்தில் மாத ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...