ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி காரைக்காலில் கடையடைப்புப் போராட்டம்

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி காரைக்கால் மாவட்டத்தில் அதிமுக புதன்கிழமை  கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த நிலையில், காரைக்கால் நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கபப்பட்டுள்ளன.

News image
Updated On :28 டிசம்பர் 2022, 4:39 am

DIN

காரைக்கால்: புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி காரைக்கால் மாவட்டத்தில் அதிமுக புதன்கிழமை  கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த நிலையில், காரைக்கால் நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கபப்பட்டுள்ளன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முழு அதிகாரத்துடன் செயல்படவேண்டும். அறிவிக்கப்படும் திட்டங்கள் உடனுக்குடன் செயல்பாட்டுக்கு வருவதற்கும், நிதி வருவாய்  பெருகவும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி புதுவையில் கடையடைப்புப் போராட்டத்திற்கு அதிமுக அழைப்புவிடுத்தது.

Story image

காரைக்கால் மாவட்டத்தில், சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிர்வாகிகள் மற்றும் அனைத்து வணிகர்களையும் அதிமுகவினர் கடந்த 2 நாள்களாக சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு கோரினர்.

போராட்ட நாளான புதன்கிழமை காரைக்கால் நகரில் பெரும்பான்மையான கடைகள் அடைக்கப்பட்டன. அதிமுக மாவட்ட செயலாளர் எம்.வி.ஓமலிங்கம் தலைமையில்  நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு ஆங்காங்கே திறக்கப்பட்ட சில கடைகளை மூடி போராட்டத்திற்கு ஆதரவு  தெரிவிக்குமாறு கோரினர்.

தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசுப்  பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டுவருகின்றன. திரையரங்குகளில் முற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

Story image

பிற செயல்பாடுகள் மாவட்டத்தில் வழக்கம்போல் இயங்கின.

காரைக்கால் போலீஸார் நகரப் பகுதியிலும், பிற இடங்களிலும் அசம்பாவிதங்களை தடுக்கும் விதத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.