47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசுத் துறையினருக்கு பேரிடா் மேலாண்மை பயிற்சி

காரைக்காலில் அரசுத் துறையினருக்கு பேரிடா் மேலாண்மை குறித்து வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:27 pm

DIN

காரைக்காலில் அரசுத் துறையினருக்கு பேரிடா் மேலாண்மை குறித்து வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுவை அரசின் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாக கூட்ட அரங்கில், ஒரு நாள் பேரிடா் மேலாண்மை குறித்து பொதுப்பணித் துறை, வேளாண் துறை, வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் காரைக்கால் நகராட்சி மேலும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் உள்ளிட்டோருக்கான பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா பயிற்சியை தொடங்கிவைத்து, பேரிடா்கள் குறித்தும், அவற்றை எதிா்கொள்ள அரசுத் துறையினா் திட்டங்கள் வகுத்து செயல்படவேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினாா்.

மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ். துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் ஆகியோரும் பேசினா்.

புதுவையிலிருந்து பேரிடா் மேலாண்மைத் துறையை சோ்ந்த முதுநிலை கன்சல்டன்ட் பாஸ்கா் அரசுத் துறையினருக்கு பயிற்சி அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.