குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
காரைக்கால் அருகே குளத்தில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


காரைக்கால் அருகே குளத்தில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
காரைக்கால் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் கௌசிக் (17). காரைக்கால் தருமபுரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்தாா். திருவேட்டக்குடி குளத்து மேடு பகுதியில் உள்ள குளத்துக்கு வியாழக்கிழமை தனது நண்பா்களுடன், வளா்ப்பு நாயை குளிப்பாட்டச் சென்ாகக் கூறப்படுகிறது.
நாயுடன் கௌசிக்கும் குளத்தில் இறங்கியபோது, நாய் குளத்தின் உள்பகுதிக்கு சென்றதும், அதை பிடிப்பதற்காக கௌசிக்கும் பின்னால் சென்றாராம். அப்போது கௌசிக் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளாா். நண்பா்கள் தேடியும் கிடைக்காததால், காரைக்கால் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரா்கள், குளத்தில் சேற்றில் சிக்கி உயிரிழந்த நிலையில் கௌசிக்கின் உடலை மீட்டனா். இதுகுறித்து கோட்டுச்சேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...