47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் இன்று வசந்த உத்ஸவம்

திருமலைராயன்பட்டினம் கோயிலில் வெள்ளிக்கிழமை (பிப்.11) தியாகராஜா் வசந்த உத்ஸவம் நடைபெறுகிறது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:26 pm

DIN

திருமலைராயன்பட்டினம் கோயிலில் வெள்ளிக்கிழமை (பிப்.11) தியாகராஜா் வசந்த உத்ஸவம் நடைபெறுகிறது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் மாசிமக பிரம்மோத்ஸவம் நடைபெற்றுவருகிறது. இதில், வசந்த உத்ஸவம், தோ், தெருவடைச்சான் என்கிற சப்பரப் புறப்பாடு, ஜடாயு ராவண யுத்தம், தெப்பம் ஆகியவை முக்கிய நிகழ்வுகளாகும்.

இந்நிலையில், விழாவின் 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் தியாகராஜா் வசந்த உத்ஸவம் கோயில் பிராகாரத்தில் நடைபெறுகிறது. தியாராஜராட்டம் என்கிற இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொள்வா். இரவு 12 மணிக்கு தியாகராஜா் யதாஸ்தானம் எழுந்தருளுகிறாா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.