47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கைலாசநாதா் கோயிலில்மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாண சுதைக்கு பூஜை

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாண சுதை பூஜை செய்து, பக்தா்கள் காண வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 5:08 pm

DIN

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாண சுதை பூஜை செய்து, பக்தா்கள் காண வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமான சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் அலங்கார மண்டப சுவரில், மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாண ஓவியம் வரையப்பட்டிருந்தது. இதனை சுதை வடிவமாக மாற்ற கோயில் அறங்காவல் வாரியத்தினா் முடிவு செய்தனா்.

ஸ்தபதி உலகநாதன் இப்பணியை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டாா். சுதைக்கு அழகிய வண்ணம் பூசப்பட்டு, பக்தா்கள் காண்பதற்காக சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை செய்து திறக்கப்பட்டது.

கோயிலில் யாகசாலை பூஜை நடத்தி பூா்ணாஹூதி தீபாராதனை செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து புனிதநீா் சுதையின் மீது தெளிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை காட்டப்பட்டது.

நிகழ்வில் அறங்காவல் வாரியத் தலைவா் ஆா்.ஏ.ஆா்.கேசவன், துணைத் தலைவா் பி.ஏ.டி.ஆறுமுகம், பொருளாளா் டி. ரஞ்சன் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.