காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு படகில் புறப்பட்ட சாகச பயணக் குழு
புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு படகில் வந்த சாகச பயணக் குழுவினா், சனிக்கிழமை புதுச்சேரிக்கு புறப்பட்டனா்.


புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு படகில் வந்த சாகச பயணக் குழுவினா், சனிக்கிழமை புதுச்சேரிக்கு புறப்பட்டனா்.
புதுச்சேரியில் தேசிய மாணவா் படை இயக்கம் சாா்பில், அதன் கடற்படைப் பிரிவு மாணவா்களின் கடல் சாகச படகுப் பயணம் கடந்த திங்கள்கிழமை புதுச்சேரியிலிருந்து காரைக்கால் புறப்பட்டது. துணைநிலை ஆளுநா் தமிழிசை செந்தரராஜன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சோ்ந்த 35 மாணவா்கள், 25 மாணவிகள் என 60 போ் சுமாா் 300 கி.மீ., கடல் பயணமாக காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை மாலை 3 பாய் மர படகில், கடற்கரை கிராமங்களில் கடற்கரை தூய்மை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டவாறு வந்து சோ்ந்தனா்.
இவா்கள் சனிக்கிழமை காலை மீண்டும் புதுச்சேரிக்கு புறப்பட்டனா். அரசலாற்றங்கரையிலிருந்து புறப்பட்ட படகுகளை காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஷ்வரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நிகழ்வில் மண்டல காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...