காரைக்கால் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 15 ஆம் தேதி 217 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை அடிப்படையில், வரிச்சிக்குடியை சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவா் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகிறாா். மாவட்டத்தில் இதுவரை 12 போ் சிகிச்சையில் உள்ளனா்.